ஏன்:
சிலர் விஞ்ஞான வளர்ச்சி இந்த இளைய தலைமுறையை எவ்வளவு தீமையில் கொண்டு சென்று தள்ளுகிறது பார்த்தீர்களா? என்று பேச தொடங்கியுள்ளனர், எந்த ஒரு விஞ்ஞான வளர்ச்சியும், கண்டுபிடிப்பும் அதை யார் எதற்காக எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதை பொறுத்தே நன்மையையோ, தீமையையோ விளைவிக்கிறது. சமையலறையில் கத்தி காய்கறி நறுக்க பயன்படுகிறது, அதே கத்தி கொலைகாரன் கையில் இருந்தால்....
சமூக ஊடகங்களில் லைக் வாங்க, புகழ் பெற சில விபரீதமான அதிர்ச்சியூட்டும் கோணங்களில், அபாயகரமான இடங்களில் இருந்து செல்பி புகைப்படங்கள் எடுப்பதே இந்த செல்பி மரணங்களுக்கு காரணமாய் உள்ளது. இதுவரை நிகழ்ந்துள்ள செல்பி மரணங்கள் எப்படி நிகழ்ந்தன என்று பார்க்கும்போது கீழ்கண்ட காரணங்களால் தான் செல்பி மரணங்கள் நிகழ்ந்துள்ளது தெரிய வந்துள்ளது: ஆபத்தான நீர்நிலைகளில் பயணம் செய்யும்போது செல்பி எடுக்கும் போது, பள்ளத்தாக்குகள், மலைப்பகுதிகள், உயரமான கட்டிடங்களின் மீதிருந்து செல்பி புகைப்படம் எடுக்க முயலும் போது, ஆட்கொல்லி விலங்குகளோடு சேர்த்து செல்பி எடுக்க முயலும் போது, வேகமாக பயணிக்கும் வாகனங்களின் முன்னின்று செல்பி எடுக்க முயலும்போது, வேகமாக பயணிக்கும் வாகனங்களிலிருந்தபடி செல்பி எடுக்க முயலும்போது, இயற்கைசீற்றங்கள் நிகழும்போது புயல், இடி, மின்னலோடு மழை பெய்யும்போது செல்பி எடுக்க முயலும்போது தான் செல்பி மரணங்கள்
நிகழ்ந்துள்ளன.
செல்பி மரணங்கள் தவிர்க்க எச்சரிப்பு செய்தி - காணொளி காட்சி
உயிரை பணயம் வைத்து வீரசாகசம் செய்து பாராட்டு பெறுவதெல்லாம் சரிதான் ஆனால் வீர சாகசம் செய்த பின்பு பாராட்டுகளை பெறுவதற்கு நீங்கள் உயிரோடு இருக்க வேண்டுமே, இனிமேலாவது செல்பி புகைப்படம் அல்லது வீடியோ எடுக்கும்போது எச்சரிக்கையாக இருங்கள்.
முந்தைய பதிவுகள்